நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் ஜெட் விமானம் மூலமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பக்திகா மாகாணத்தில் குண்டு மழை பொழிந்துள்ளது. இந்த தொடர் தாக்குதலால் ஏழு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உட்பட பெண்கள் குழந்தைகள் என 15 பேர் உயிரிழந்திருப்பதாகவும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.