
பிரதமர் நரேந்திர மோடி இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்பு படை தலைவர் அணில் சவுக்கான் முப்படைகளின் தளபதி கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தின் போது பஹல்காம் தாக்குதல் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடி இந்திய ஆயுதப்படைக்கு முழு சுதந்திரம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
அதாவது பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுவதால் அவர்களுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதோடு சிந்து நதிநீரையும் நிறுத்தி வைத்துள்ளது.
இதன் காரணமாக பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தியதோடு எல்லையில் ராணுவ வீரர்களை குவித்து வைத்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து ஐந்தாவது நாளாக பாக் ராணுவம் தாக்குதல் நடத்தினர். அவர்கள் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல்களை முழுமையாக நசுக்க வேண்டும் என்பதால் தற்போது ஆயுதப்படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக இலக்குகள் மற்றும் நேரத்தை தீர்மானிக்க ஆயுதப்படைகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் ஆயுதப்படைகள் அவர்கள் மீது முழு சுதந்திரத்தோடு பதிலடி கொடுக்கலாம்