பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரோப் கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பழனியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதால் கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்கு ரோப் கார் சேவைகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் ரோப் கார் சேவை இரவு பூஜை வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார்ட் சேவை ஒரு நாள் மட்டும் இயங்காது என்று பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.