தமிழகத்தில் காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட மதிய உணவு திட்டம் தற்போது அனைத்து அரசு பள்ளிகளிலும் சத்துணவு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போதைய ஆட்சியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும் அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பல மாநிலங்களிலும் அரசின் இந்த செயல்பாடு பின்பற்றப்பட்டு வருகிறது.

அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் மதிய உணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு முட்டை அல்லது வாழைப்பழம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசின் புதிய அறிவிப்பின்படி மதிய உணவில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை மதிய உணவாக முட்டை பிரியாணி, முட்டை பிரியாணிக்கு பதில் வழக்கமான மதிய உணவு மற்றும் அவித்த முட்டைகள் வழங்கப்படும். முட்டை வேண்டாம் என்று கூறும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் இந்த புதிய அறிவிப்பு பள்ளி குழந்தைகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.