இந்தியாவில் வங்கி கணக்குகளை விட அஞ்சல் அலுவலகங்களில் அதிக அளவு லாபம் கிடைப்பதால் மக்கள் பலரும் அதில் முதலீடு செய்து வருகிறார்கள். அதில் போஸ்ட் ஆபீஸ் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் நிலையில் இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு 7.5% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் நீங்கள் விரும்பிய தொகையை முதலீடு செய்ய முடியும். அதாவது இதில் பத்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 115 ஆவது மாதத்திற்கு பிறகு 20 லட்சம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். இரட்டிப்பு லாபம் தரக்கூடிய இந்த திட்டத்தில் நீங்கள் சேர விரும்பினால் உடனடியாக அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸுக்கு நேரடியாக சென்று பணத்தை முதலீடு செய்யலாம்.