ஒவ்வொரு வருடமும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் அறக்கட்டளையின் அறங்காவலர் வெளியிட்டுள்ள செய்தியில், 2023-24தான் கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பயில் பவராக இருக்க வேண்டும்.

இறுதியாக எழுதிய தேர்வில் எண்பது சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவர்களின் குடும்ப வருமானம் ஒரு லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். இந்த தகுதி உடையவர்கள் https://images.assettype.com/kalkionline/2023-06/0a7f2ec6-aa82-481b-baae-9cfd3118853c/Kalki_Trust_Form.pdf என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதனுடன் உரிய ஆவணங்களை இணைத்து கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, கீதம் முதல் மாடி, நெ 14, -நாலாவது பிரதான சாலை, கஸ்தூர்பா நகர் அடையாறு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.