சென்னை மாவட்டம் திருவெற்றியூர் பகுதியில் உள்ள சார்லஸ் நகரை சேர்ந்தவர் முகமது குஸ் நசிப்(17). இவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் படிக்கும் பள்ளி அதே பகுதியில் அமைந்துள்ளதால் பள்ளி முடிந்த பிறகு விம்கோ ரயில் நிலையத்தின் வழியாக வீட்டுக்கு செல்வது வழக்கம்.

நேற்று பள்ளி முடிந்த பிறகு மாலை வழக்கம் போல வீட்டிற்கு செல்வதற்காக அமீர் ரயில் நிலையத்தின் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரயில் நசிப் மீது மோதியது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நசீப் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.