
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறந்து விட்டது. மாணவர்களும் அடுத்ததாக தங்களின் தேர்வுகளுக்கு தங்களை தயார்ப்படுத்தி வருகின்றார்கள். இந்நிலையில் இறையன்பு இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், அவரின் கடைசி உத்தரவு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.
எனவே, வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஏற்படுத்தவும். மாதந்தோறும் மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.