
தமிழக அரசு சார்பில் பேரிடர் காலங்களில் மழை பெய்யும் பொழுது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் பல்வேறு முக்கிய துறைகள் பணிபுரியும் விதமாக தொழில்நுட்ப அம்சங்களுடன் மாநில அவசர கால செயல்பாட்டு மைய கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 16 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்படவுள்ளது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.