
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏஐ309 போயிங் விமானம் பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்டது. விமானம் நடுவானில் வந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. இதனால் போயிங் ட்ரிம்லைனருடன் இயங்கிக் கொண்டிருந்த விமானம் மருத்துவ அவசரத்திற்காக மெல்போர்னில் தரையிறங்கியது. அங்கு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பயணியயும் அவரது உறவினர்களையும் இறக்கி விட்டு மீண்டும் பயணத்தை தொடங்கிய விமானம் தாமதமாக நேற்று இரவு 9:30 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்தடைந்துள்ளது.