நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை புகர் பகுதிகளான அரக்கோணம், சூலூர் பேட்டை, செங்கல்பட்டு, வேளச்சேரி பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேசிய விடுமுறை நாளான இன்று ரமலான் பண்டிகை முன்னிட்டு இந்த ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.