திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கட்ட மடுவு பகுதியில் சிபிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது.

இதனால் சிபிராஜும் அவரது நண்பரும் படுகாயம் அடைந்தனர். பயங்கர சத்தத்தை கேட்ட உறவினர்கள் படுகாயமடைந்த இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.