ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கன்னிவெடியை பதுக்கி வைத்துள்ளனர். இதனை அறிந்த ராணுவ வீரர் ஹவில்தார் வரிகுண்ட்லா வெங்கட சுப்பையா (44) அங்கிருந்த ராணுவ வீரர்களை உடனடியாக கிளம்புமாறு கூறியுள்ளார். அவர் எல்லையில் ‌ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கன்னிவெடி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்த நிலையில் அங்கிருந்த ராணுவ வீரர்களை உடனடியாக வெளியே அனுப்பினார்.

இதன் மூலம் சுமார் 30 பேரின் உயிரைக் காப்பாற்றிய அவர் வெடி விபத்தில் உயிரிழந்துவிட்டார். இவர் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு பிள்ளைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் ராணுவ வீரர் சுப்பையா 30 பேரின் உயிரை காத்து விட்டு வீரமரணம் அடைந்த நிலையில் அவருடைய குடும்பத்தினருக்கு ராணுவத்தினர் ஆறுதல் கூறிய நிலையில் இனிவரும் நாட்களில் அவருடைய உடல் சொந்த ஊருக்கு அனுப்பப்படும் என்றும் அங்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.