மதுரை சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சுய உதவிக்குழுக்களின் அடையாளமாகத் திகழ்ந்த இவருக்கு 2019ல் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. வீடு இன்றி தவித்த இவருக்கு பிரதமர் திட்டத்தின் கீழ் வீடு தருவதாக சிலர் உறுதியளித்திருந்தனர். இந்நிலையில், உறுதி கொடுத்து 2 வருடமாகியும் வீடு கிடைக்கவில்லை என அவர் வேதனை தெரிவித்திருந்தார்.