
மதுரை மாவட்டத்திலுள்ள புறப்பனூரில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தங்களுக்கு சொந்தமான இடத்தை அளக்க கொக்குளம் பீர்க்கா சர்வேயர் சித்ராதேவியை அணுகி உள்ளார். அப்போது நிலத்தை அளந்து கொடுக்க சித்ராதேவி ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து அஜித்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனை எடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அஜித்குமார் சித்ராதேவியிடம் கொடுக்க சென்றார். அப்போது அவர் அந்த பணத்தை தனது கணவர் கணேசனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். பணத்தை கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சித்ரா தேவியையும் கணேசனையும் அதிரடியாக கைது செய்தனர்.