தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பழனிசாமி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் பட்டுக்கோட்டை மற்றும் வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, ஒரத்தநாடு, திருச்சிற்றம்பலம், கோட்டை தெரு, மதுக்கூர் உள்ளிட்ட ஏழு துணை அஞ்சல் அலுவலகங்களில் நாளை முதல் வருகிற 18-ஆம் தேதி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் அனைத்து வேலை நாட்களிலும் நடைபெற உள்ளது.

அதனால் பொதுமக்கள் மற்றும் பி.எம் கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் இந்த முகாமில் இலவசமாக புதிதாக ஆதார் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல் பழைய ஆதார் அட்டையில் முகவரி பெயர் மற்றும் செல்போன் எண் திருத்தம் போன்றவற்றை திருத்தம் செய்ய ரூ50, பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து  இந்த முகாமை பயன்படுத்தி ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.