தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த 22 ஆம் தேதி 50வது பிறந்த நாளை கொண்டாடினார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராஜாஜி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் நகர செயலாளர் சசிகுமார் ரத்ததான முகாம்கள், நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினார்.

இந்நிலையில் மாலை நேரத்தில் சசிகுமார் தலைமையில் சலீம் என்ற நபர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கீழ் புதூர் பகுதிக்கு சென்று நிகழ்ச்சி நடத்தினர். அப்போது மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் கிளை தலைவரான விஜய் என்பவர் என்னிடம் தெரிவிக்காமல் இங்கு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என வாக்குவாதம் செய்தார்.

அவர் கூறியதை கேட்டதும்  கோபமடைந்த தப்ரீஷ் என்பவர் தனது நண்பர்களுடன் விஜய் என்கிற நாகராஜனிடம் சென்று “எங்களை கேள்வி கேட்பதற்கு நீ யார்…? உனக்கு என்ன தகுதி உள்ளது….?நாங்கள் அப்படி தான் செய்வோம்….” என்று கத்தியை வைத்து மிரட்டியுள்ளார். அவர்களுக்கிடையேயான தகராறு முற்றிய நிலையில் சூர்யா, முருகேசன் , பார்த்திபன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி கொண்டாட வந்த குழுவினர் அவர்களது காரை அதே பகுதியில் விட்டு சென்ற நிலையில் காரின் கண்ணாடிகளை அப்பகுதி மக்கள் உடைத்து நொறுக்கினர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட தவெக செயலாளர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கத்தியுடன் மிரட்டல் விடுத்த நபர் தவெக கட்சியை சேர்ந்தவர் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற “விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கத்தியுடன் தாக்குதல் நடத்திய நபருக்கும், தவெக கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கடந்த 15 நாட்களாக அவர் கட்சியின் துண்டு அணிந்து கொண்டு கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தி வந்துள்ளார்”என்று கூறினார்.