
சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் வாலிபர் ஒருவருடன் பைக்கில் சென்றுள்ளார். இவர்கள் பைக்கில் இருந்து கீழே இறங்கி ஒரு ஹோட்டலில் சென்று பார்சல் வாங்கிவிட்டு மீண்டும் பைக்கில் கிளம்பினர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவர்களுடைய பைக்கை வழி மறித்தார். அவர் அந்த வாலிபரை அரிவாளால் சரம் மாறியாக வெட்டிய நிலையில் தடுக்க சென்ற அந்த பெண்ணையும் வெட்டினார்.
இதில் அந்த இளம் பெண்ணுக்கு கையில் காயம் ஏற்பட்டது. அந்த பெண்ணுடன் வந்த வாலிபர் உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் தலைநகரில் பட்ட பகலில் இளம் பெண் ஒருவரை அரிவாளால் ஒருவர் வெட்ட முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.