
பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் பகுதியில் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் பெண் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்தப் பெண் தன்னுடைய ஸ்கூட்டியின் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் திடீரென அந்த ஸ்கூட்டியின் மீது இடித்துள்ளதாக கூறப்படுகிறது.
உடனடியாக அந்த ஆட்டோ ஓட்டுனர் கீழே இறங்கி வந்து பெண்ணுக்கு விளக்கம் கொடுத்த நிலையிலும் அந்த பெண் அதனை ஏற்றுக் கொள்ளாமல் அவரை செருப்பால் அடித்தார். இதனை சுற்றியுள்ளவர்கள் வீடியோ எடுத்த நிலையிலும் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் வீடியோ எடுங்கள் என கத்திக்கொண்டே அந்த ஆட்டோ ஓட்டுனரை பலமுறை செருப்பால் அடித்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்.
Another Road Rage Incident in Bengaluru: Woman Assaults Auto Driver in Bellandur Over Alleged Collision
Yet again, Bengaluru witnesses an ugly road rage incident—this time in the Bellandur area where a woman was caught on camera assaulting an auto-rickshaw driver following a… pic.twitter.com/7EpUZ7U7w8
— Karnataka Portfolio (@karnatakaportf) May 31, 2025
இந்த சம்பவத்தின் போது ஆட்டோ ஓட்டுனர் மிகவும் அமைதியாக இருந்த நிலையில் உங்கள் ஸ்கூட்டியை நான் இடிக்கவே இல்லை என்று அவர் பரிதாபமாக கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் பட்ட பகலில் நடு ரோட்டில் இப்படி ஒருவரை மனசாட்சியே இல்லாமல் பெண் ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.