மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்திய பொருளாதாரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக நாடுகள் இந்தியா மீது வைத்துள்ள நம்பிக்கை கடந்த 10 வருடங்களில் அதிக அளவில் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த வருடம் முதல் நாடு முழுவதும் கூடுதலாக பத்தாயிரம் மருத்துவ படிப்பு இடங்கள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார். ஒரு கோடி கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்க புதிய திட்டம் வகுக்கப்படும். மேலும் மாநிலங்கள் முழு கட்டமைப்பு வசதியை மேம்படுத்த 1.50 லட்சம் கோடி வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்று கூறினார்.