
சென்னையில் உள்ள திருவான்மியூர் பகுதியில் இளம்பெண் நித்யஶ்ரீ என்பவர் வீட்டில் மர்மமான முறையில் கடலமாகக் கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது சென்னை திருவொற்றியூர் பகுதியில் பாஸ்கர்-வரலட்சுமி தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களது மகள்தான் நித்யஸ்ரீ. இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அவரது பெற்றோர் சென்னையில் இருந்தாலும் அவர்களுடன் வசிக்காமல் தனியாக வசித்து வந்தார். இவர் கொடுங்கையூரில் உள்ள ஒரு பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் பாலமுருகன் என்பவருடன் லிவிங் உறவில் இருந்தார்.
இதில் பாலமுருகன் ஹோட்டலில் மேனேஜ்மென்ட் படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்த நிலையில் இவரை நித்திய ஸ்ரீ தன்னுடைய வீட்டில் தங்க வைத்தார். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மட்டும் பாலமுருகனை வெளியே தங்குமாறு அவர் கூறியுள்ளார். இதனால் அன்றைய தினம் இரவு மட்டும் பாலமுருகன் வெளியே தங்கி விட்டு மறுநாள் காலையில் நித்யா வீட்டிற்கு சென்றார். அங்கு கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையில் நித்யா மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரின் அருகே தூக்க மாத்திரைகள் கிடந்த நிலையில் பதறிப்போன பாலமுருகன் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கவே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு நித்யா இறந்து கிடப்பதை பார்த்த போலீசார் பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனிடம் நடத்திய விசாரணையில் இருவரும் தாலி கட்டி கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும் வேலைக்கு செல்லும்போது நித்தியா தாலியை கழட்டி வைத்துவிட்டு செல்வதாகவும் கூறினார்.
அதன்பிறகு வீட்டில் லாக்கரில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதாகவும் தெரிவித்தார். ஆனால் நித்யாவின் பெற்றோர் பாலமுருகன் நகைக்காக தங்கள் மகளை கொலை செய்திருக்கலாம் என்று கூறினர். இந்த நிலையில்தான் இந்த வழக்கில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்து. அதாவது நித்யாவுக்கு மருத்துவரான சந்தோஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் சந்தோஷ்குமாரிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை நித்யா மிரட்டி வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவ நாளில் நித்யாவின் வீட்டிற்கு சந்தோஷ் குமார் சென்ற நிலையில் அங்கு மது அருந்தியுள்ளார். அவர் குளிர்பானம் என நித்தியாவிடம் கொடுத்ததோடு அதில் தூக்க மாத்திரைகளை கலந்துள்ளார். பின்னர் நித்தியா மயங்கியதும் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு அவர் தப்பி ஓடிவிட்டார். அந்த நகைகளை அவரது நண்பர் முஜிபூர் பாஷா என்பவர் மறைத்து வைத்திருந்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் சந்தோஷ்குமார் உடன் ஏற்கனவே லிவிங் உறவில் நித்யா இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.