பசுமை கட்டிடம் அதிக அளவில் ஏற்படும் காற்று மாசுபாடு மற்றும் மின்சார பயன்பாட்டை குறைக்கும் திட்டமாக இருக்கிறது.  பசுமைக் கட்டடத்தை அதிகரிப்பதற்க்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த கட்டிடங்களுக்கு ஏற்றவாறு ஐஜிபிசி 31 வகையான தர சான்றுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் மிக குறைந்த அளவில் எரிசக்தியை பயன்படுத்தி கட்டப்படும் பசுமை வீடுகள் மற்றும் காரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் விதமாக கட்டப்படும் பசுமை வீடுகளுக்கு நெட் ஜீரோ என்ற புதிய தரச் சான்று வழங்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் எனவும் நம்பப்படுகிறது.