திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்துக்கான இலவச டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. கோவிலில் பாலாயம் நடைபெறும் பிப்.23-28ம் தேதி வரை தவிர்த்து மற்ற நாட்களுக்கு டிக்கெட்வெளியிடப்படும் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்களை நாளை மாலை 3 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் பெறலாம்.