உ.பி.யின் புலந்த்ஷஹரில் நடந்த ஒரு சம்பவம்,  தற்போது மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது 2 குழந்தைகளின் தாய், தனது கணவரை ஏமாற்றி, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருடன் காதல் உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அகமதுகர் பகுதியில் நடந்துள்ளது. திடீரென, கணவர் அவரது மனைவியையும் அவளுடைய காதலனையும் கையும் களவுமாக பிடித்தார். அதனைத்தொடர்ந்து, அவர்களுடன்‌ சண்டை எதுவும் போடாமல் நேரடியாக காவல் நிலையத்துக்குச் சென்றார்.  அங்கு வைத்து கணவன் காவல்துறையினரிடம் ஒரு அதிர்ச்சியான முடிவை சொன்னார்.

 

அதாவது போலீசாரின் முன்னிலையில், அவர் எழுத்துப்பூர்வமாக மனைவியைத் தனது காதலனுடன் வாழ அனுமதிக்கிறேன் என்றும், இரண்டு குழந்தைகளையும் அவளிடம் ஒப்படைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அதனுடன், இருவரின் தலைகளிலும் கையை வைத்து, இருவருக்கும் ஆசீர்வாதம் அளித்தார். கணவன், “அவள் அவனுடன் மகிழ்ச்சியாக இருக்கும்போது, என் பிடியில் ஏன் வைத்திருக்க வேண்டும்? உண்மையான காதலுக்கே வழி தர வேண்டும்” என்று கூறி, அழுதபடியே அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் பற்றிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் இதைப் பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர். சிலர், “கணவரின் செயல்தான் உண்மையான மனிதத்துவம்” என பாராட்டுகிறார்கள்; மற்றவர்கள், “இதுபோன்று உறவை விட்டுவிடுவதை எளிதில் ஏற்கக் கூடாது” என விமர்சிக்கிறார்கள்.

இது முழுக்க இருவருடைய சம்மதத்துடன் நடந்த சம்பவமாக இருப்பதால், போலீசாருக்கு சட்ட ரீதியாக தலையிடும் இடமில்லை. இருப்பினும், இதுபோன்று குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் நடந்த சம்பவம் பரிதாபத்தை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், கணவரின் இந்த “தியாக மனப்பான்மை” சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் கணவனை பாராட்டினாலும் மனைவியின் செயலை விமர்சிக்கின்றனர்.