கதா பானம் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்

  • ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த கதா பானம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • கதா பானத்தில் தேன் கலந்து குடித்தால் எப்படிப்பட்ட இருமலும் சரியாகும்.
  • கதா பானம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, செரிமான பிரச்சனைகளை சரி செய்து விடும்.
  • கதாபானம் அருந்துவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
  • குளிர்காலத்தில் மூட்டு தொடர்பான பிரச்சனைகளுக்கு கதா பானத்தில் மஞ்சள் கலந்து குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்

தண்ணீர்                 – 2 கப்

கிராம்பு                    – 5

துளசி                       – 6 இலைகள்

கருப்பு மிளகு.      – 6

இஞ்சி                       – 1 துண்டு

லவங்கப்பட்டை  – 2 அங்குலம்

தேன்                          –  ½ தேக்கரண்டி

செய்முறை

முதலில் இஞ்சி மிளகு கிராம்பு லவங்கப்பட்டை போன்றவற்றை நசுக்கி எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதித்ததும் நசுக்கி வைத்துள்ள பொருட்களை சேர்க்கவும்.

துளசி இலைகளையும் போட்டு தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் வற்றியதும் வடிகட்டி தேன் சேர்த்து அருந்தலாம்.