நாடாளுமன்றத்தில் 2023 – 2024 நிதியாண்டுகான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கல் பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. அதாவது நிதி அமைசர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட் பற்றி பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி விமர்சித்துள்ளார். இது பட்ஜெட் அல்ல மளிகை கடைக்காரரின் பில் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நேற்று தாக்கல் செய்யப்பட்டது பட்ஜெட்டா?

இது மளிகை  கடைக்காரர் ஒருவரின் பில்லாக இருக்கிறது. சரியான பட்ஜெட் என்பது நாட்டின்  குறிக்கோள் என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை குறிப்பிட்டால் நாட்டில் முதல் நிலை என்ன? வருவாய் விகிதம் என்ன? என்பதை   பற்றி தெரிவிக்க வேண்டும். இதைப் போல் பொருளாதார வளர்ச்சி நாட்டின் வளங்களை கையாளும் திட்டம் போன்றவற்றை எடுத்துக்காட்ட வேண்டும் பிற பதிவிட்டுள்ளார்.