நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் பாண்டியன் (34). பாஜகவில் இளைஞர் அணி செயலாளராக இருந்து வந்தார். நேற்று இரவு அவரை பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது. பலத்த ரத்தக் காயத்துடன் கிடந்த அவரை மீட்ட அப்பகுதி மக்கள், பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.