
சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் பெண்கள் ரயில் பெட்டி நிற்கும் பகுதியில் நிர்வாணமாக நின்று ஆபாச செயலில் ஈடுபட்ட நபர் தொடர்பான வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து, சென்ட்ரல் ரயில்வே போலீசும், ஓட்டேரி போலீசும் இணைந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், குற்றவாளியான முனுசாமி (32) என்பவர் வியாசர்பாடி காந்திபுரத்தைச் சேர்ந்தவர் என்றும், கோயம்பேட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பராக வேலை செய்து வருவதாகவும் தெரியவந்தது.
அவர், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் ரயில் நிலையத்திற்கு வந்து, பெண்கள் உள்ள இடத்திற்கு அருகே தொடர்ந்து ஆபாசமாக நடந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. நேற்று மதியம் மீண்டும் அதே வகை செயலில் ஈடுபட முற்பட்டபோது, ரகசியமாக கண்காணித்திருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தற்போது, அவரிடம் ஓட்டேரி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பாதுகாப்பு கேள்விகளை எழுப்பியுள்ளது.