
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த குமாரக்குடி கிராமத்தின் ஏரியின் வளைவில் பழமை வாய்ந்த பாலம் ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பாலத்தின் வயது சுமார் நூறு ஆண்டுகளை கடந்ததாகும்.
இந்த பாலத்தின் வழியாக சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நிலையில் பாலத்தின் வழியாக நேற்று அரசு பேருந்து ஒன்று சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பாலத்தின் முகப்பில் மோதியது. உடனே பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர். அதிர்ஷ்டவசமாக நூலிலையில் அனைத்து பயணிகளும் உயிர் தப்பி விட்டனர்.
இந்த பாலம் மிகக் குறுகிய பாலமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாலத்தை அகற்றும்படி கோரிக்கை எழுப்பி உள்ளனர்.