
ஸ்பெயின் நாட்டில் உள்ள பயோ பார் உயிரியல் பூங்காவில் இந்த குரங்கு உள்ளது. இந்த சிம்பன்சி குரங்கின் பெயர் நடாலியா என்று அறியப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. பிறந்த சில நாட்களில் அந்த குட்டி உயிரிழந்துள்ளது.
இருந்தாலும் அந்த குட்டியை விட்டு பிரிய மனம் இல்லாத நடாலியா, அப்போது முதலே அதை தன்னோடு வைத்துக் கொண்டுள்ளது. இது சிம்பன்சி குரங்குகளின் சாதாரண நடவடிக்கை எனவும் அடர் வனப்பகுதியில் உள்ள சிம்பன்சி குரங்குகளும் இதே போன்று தான் செய்யும் என்றும் பூங்கா ஊழியர்கள் கூறுகின்றனர்.