அசாம் மாநிலம் கவுகாத்தியிலுள்ள ஐகோர்ட்டுக்கு மகாஜன் என்ற வக்கீல் ஒருவர் நேற்று ஜாமின் மனு விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளார். அப்போது அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு வந்துள்ளார். இதை பார்த்த நீதிபதி கல்யாணராய் சுரானா அதிருப்தி அடைந்து உடனடியாக போலீசை வரவழைத்து அந்த வக்கீலை கோர்ட் வளாகத்தை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டார். மேலும் அவரது தரப்பு ஜாமின் மனு மீதான விசாரணையும் நீதிபதி கல்யாணராய் சுரானா ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

இதுகுறித்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டதாவது, கற்றறிந்த வக்கீல் பி.கே.மகாஜன் மனுதாரருக்கு ஆஜராக வந்த போது  ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்துள்ளார். அதனால் அவர் கோர்ட் வளாகத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தலைமை நீதிபதி மற்றும் ஐகோர்ட் தலைமை பதிவாளர் கவனத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என நீதிபதி கல்யாண் ராய் சுரானா உத்தரவிட்டுள்ளார். மேலும் மிசோரம் ,அசாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, பார் கவுன்சில்களும் இது குறித்து தெரிவிக்க ஆணையிட்டுள்ளார். வழக்கறிஞர் ஒருவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு கோர்ட்டுக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.