
நீதிபதி பொன் பாஸ்கரன் மறைவுக்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் நீதிபதி பொன். பாஸ்கரன் மறைவு செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக கூறியுள்ளார். தஞ்சை மண்ணின் மைந்தரான நீதிபதி பொன். பாஸ்கரன் மறைந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
அவர் கலைஞர் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தவர். அவரது மறைவு நீதித்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.