
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் இடுகாட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கிரிதரன் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருக்கும் தனியார் கொரியர் சர்வீஸில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று நள்ளிரவில் கிரிதரன் வேலை பார்க்கும் கொரியர் சர்வீசில் ஆயுத பூஜை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தனது தந்தை ரமேஷை பார்த்து ஆயுத பூஜை பொறியை கையில் கொடுத்து நீங்கள் பேருந்தில் வாருங்கள் நான் இருசக்கர வாகனத்தில் செல்கிறேன் என கூறியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரியில் மோதி கிரிதரன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் பின்னால் வந்த லாரி கிரிதரனின் வலது கால் மற்றும் கை மீது ஏறியது. இதனால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கிரிதரன் உயிரிழந்தார். அதேசமயம் பின்னால் பேருந்தில் வந்த கிரிதரனின் தந்தை அதை பார்த்து துடித்து பதறியடித்து கொண்டு அழுதார். இது சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.