பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அமித்ஷா சென்னைக்கு வரும்போது கருப்புக் கொடி காட்டப்படும் என காங்கிரஸ் செல்வப் பெருந்தகை கூறினார். அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை தாராளமாக காட்டட்டும். கருப்புக்கொடி நானே வாங்கி கொடுக்கிறேன்.

கருப்பு கொடி காட்டினால் அமித்ஷா ஜி காலில் இருக்கும் தூசி கீழ விழுந்துருமா? கருப்புக்கொடி காட்டுனா அமித்ஷா விமானம் டேக் ஆஃப் ஆகாதா? கருப்புக்கொடி காட்டுனா அமித்ஷா ஜி பயந்து, ஐயோ நான் உள்துறை அமைச்சர் பதவி ராஜினாமா பண்ணிட்டு அகமதாபாத்தில் இருந்துகிறேன் என்று சொல்கிறாரா? அவங்க ஆளுங்கட்சியில இருக்காங்க. கூட்டணியில் இருக்காங்க. அதனால காவல்துறையே கருப்புக்கொடி காட்ட அனுமதி கொடுப்பாங்க. யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க. கருப்பு கொடி பத்தலைன்னா சொல்லுங்க. நானே வாங்கி தரேன்.

கருப்புக்கொடி, வெள்ளக்கொடி, சிகப்பு கொடி, பச்சைக்கொடி என என்ன கலர் கொடி வேணுமோ பிஜேபி ஆபீஸ்ல இருந்து வாங்கி காங்கிரஸ் காரங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அவங்க இப்போதைக்கு தமிழ்நாட்டுல வளராததால் காசு இருக்குமான்னு தெரியல. அதனால நானே கைக்காசு போட்டு கொடி வாங்கி அனுப்புறேன். கருப்பு கொடி பார்த்து நாங்க பயப்படுவோமா? விமானம் இறங்கும். அமித்ஷா ஜி வந்து வேலையை செய்வார். திரும்ப டெல்லிக்கு போவார் என கூறியுள்ளார்.