பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான இர்பான் கான் நியாஸி, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக டிராஃபிக் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்த இர்பான் கானை தடுத்து நிறுத்திய போலீஸ் அதிகாரி, முதலில் கண்டிப்புடன் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை அடையாளம் கண்டுகொண்டதும், “நீங்கள் நாட்டின் சொத்து, உங்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம்” என மிகவும் கனிவான முறையில் அறிவுரை வழங்கினார்.
A traffic warden stopped Irfan Niazi for not wearing a seatbelt.
– A nice conversation about cricket. 😄 pic.twitter.com/WJwuL2GcS4
— Salman. (@TsMeSalman1_) May 9, 2026
இந்த உரையாடலின் போது அந்த அதிகாரி விளையாட்டாக 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்போவதாகக் கூறிய போதிலும், இர்பான் கானின் எளிமையைக் கண்டு வெறும் எச்சரிக்கையுடன் அவரை அனுப்பி வைத்தார். அதைத்தொடர்ந்து, அந்த அதிகாரி பிஎஸ்எல் தொடரில் ‘ஹைதராபாத் கிங்ஸ்மென்’ அணியின் அதிரடி முன்னேற்றம் குறித்து இர்பான் கானுடன் கலந்துரையாடினார். மார்னஸ் லபுஷேன் தலைமையில் முதல் நான்கு போட்டிகளில் தோற்றாலும், பின்னர் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப்போட்டி வரை சென்ற அந்த அணியின் சாதனை குறித்து அவர்கள் பேசியது கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
