தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒரு பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய மனைவி பற்றி உருக்கமாக பேசியுள்ளார். அதாவது ஐஸ்வர்யா என்பவரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காதலித்து கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆத்மிகா மற்றும் ஆருத்ரா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென சினிமா மீது ஆசை வந்ததால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சினிமா பக்கம் வந்தார். அந்த சமயத்தில் லோகேஷ் கனகராஜுக்கு நிலையான வருமானம் இல்லாததால் அவருடைய மனைவிதான் வங்கிக்கு வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி படம் வெளியான பிறகு தன்னுடைய மனைவியிடம் வேலையை ராஜினாமா செய்யுமாறு கூறியுள்ளாராம். மேலும் கஷ்ட காலத்தில் உதவிய தன்னுடைய மனைவி பற்றி லோகேஷ் கனகராஜ் உருக்கமாக பேசியது தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.