சந்திரயான் 3 மூலம் உலகளவில் முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோ தனது அடுத்த வெற்றிக்கு தயாராகிவிட்டது. அதாவது சூரியனுக்கு அருகில் சென்று ஆராய்ச்சி செய்ய விண்கலன் ஒன்றை இஸ்ரோ தயார் செய்து வந்தது. இந்நிலையில் ஆதித்யா-எல்1 என்ற பெயர் கொண்ட அந்த விண்கலன் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 11:50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. சூரியனை ஆராய்ச்சி செய்ய விண்கலன் அனுப்புவது நாட்டின் புது முயற்சியாகும். ஏவுகணை மற்றும் விண்கலனில் உட்புற அமைப்புகள் பரிசோதனை செய்யப்பட்டு விண்ணில் ஏவுவதற்கான ஒத்திகையும் முடிந்துள்ளது. இதனால் இஸ்ரோ நாட்டிற்கு மற்றும் ஒரு வெற்றியை தேடி தரும் முயற்சியில் இறங்கிவிட்டது.