
பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு இன்று சென்ற பிரதமர் மோடி சந்திராயன் -3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டினார். பின்னர் பேசிய அவர், சந்திரயான்-2 தோல்வியடைந்த பிறகு நாங்கள் பின்வாங்கவில்லை, கடினமாக உழைத்து சந்திரயான்-3 இல் வெற்றி பெற்றோம். இப்போது எல்லா வீடுகளிலும் மட்டுமின்றி நிலவிலும் மூவர்ணக் கொடி பறக்கிறது.
நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடம் “சிவசக்தி” என அழைக்கப்படவுள்ளது. அதுபோல லேண்டர் தரையிறங்கிய தினம் (ஆக. 23) ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும். மேலும், இந்தியாவின் பெருமை அசோக சக்கரம் தற்போது நிலவில் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்