கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று மருந்து வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மோனோக்ளோனல் என்ற ஆன்டிபாடி மருந்து வழங்கப்படும். இங்கு 60 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நிஃபா வைரஸ் கண்டறியப்பட்ட மலப்புரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த 10ம் தேதி முதல் அந்த சிறுவனுக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.