பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், ஒரு பெண் மருத்துவரின் ஹிஜாப்பைத் தொட்டு அகற்ற முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டு எக்ஸ் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் கோபத்தை உருவாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில், “நீங்கள் முதலமைச்சராக இருந்தாலும், ஒரு பெண்ணின் ஹிஜாப்பைக் கழற்ற உங்களுக்கு உரிமை இல்லை.

அதிகாரம் இருப்பதால் முஸ்லிம்களை அவமானப்படுத்தாதீர்கள்” என்று பலர் ஆவேசமாக நிதீஷ் குமாரைக் கண்டித்துள்ளனர். மேலும், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.