தமிழகத்தில் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த அக்டோபர் 27-ந் தேதி துவங்கப்பட்டது. இந்த பணி டிசம்பர் 9-ந் தேதி வரை நடக்க உள்ளது.  2024ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதேபோல், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம்-நீக்கம் செய்து கொள்ளலாம். வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, Licence, ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கொண்டு செல்லவும்.