நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருக்கும் சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  மேலும் தற்போது சில படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சிட்டிபாபுவுக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. ரூ. 60 கோடி பட்ஜெட்டில் சமந்தா நடித்து திரைக்கு வந்த ‘சாகுந்தலம்’ ரூ.10 கோடி மட்டுமே வசூலித்தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய சிட்டிபாபு, ‘நான் வாய் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும். பேசட்டுமா?’ என கூறியுள்ளார். அவரது கருத்துக்கு சமந்தா பதிலளிப்பாரா என இனி தான் பார்க்க வேண்டும்.