தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் நேற்று தைப்பூச விழா கொண்டாடப்பட்ட நிலையில், தமிழக பா.ஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு காரில் பழனிக்கு வந்தார். பின்பு அடிவாரத்தில் இருந்து காவடி எடுத்து திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதன்பிறகு பழனி முருகனை நல்லபடியாக தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கினார். பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “அமைச்சர் சேகர்பாபு எப்படி சபரிமலைக்கு போகிறார். அவர் போகும் பொழுது அந்த இடத்தை முழுவதும் சுத்தம் பண்ணி அவர் தனியாக நின்று சாமி கும்பிட்டு வருகிறார்..

அப்படி இருக்கக்கூடிய அறநிலைத்துறை அமைச்சருக்கு எப்படி மக்களுடைய அருமை தெரியும். சொர்க்கவாசல் திறந்தாங்க. எங்க திறந்தாங்க? திருச்சி., ஸ்ரீரங்கத்தில்  திறந்தாங்க. அங்கே சேகர் பாபு குடும்பத்தோடு எவ்வளவு அட்டூழியம் பண்ணினார்.  எல்லாரையும் தள்ளிவிட்டு சாமியை முதல் ஆளாக பார்க்க வேண்டும் என்று அக்கறை காட்டக்கூடிய சேகர் பாபு அவர்கள் சாதாரண பொதுமக்கள் வெறும் காலில் நடந்து கிலோமீட்டர் கணக்கில் வருகிறார்கள். அவர்களுக்கு அந்த அக்கறை காட்டலாமே. முதலமைச்சர் மனைவி வருகிறார் என்றால் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள்.

சாதாரண மனிதர்களுக்கு ஏன் அவ்வளவு வசதி கொடுக்க மாட்டேங்குறாங்க. சொன்னா உடனே வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்து விடுவார் சேகர் பாபு. என்னை முதலமைச்சர் அடக்கி வைத்திருக்கிறார் நான் முரட்டுக்காளை என்னை அவிழ்த்து விட்டா அண்ணாமலை மேல் முட்டி விடுவேன் என்று டயலாக் விடுவார்.  ஒரே டயலாக்கை மூன்று வருஷமா தேஞ்சு போன டேப்ரிக்கார்டு மாதிரி சொல்கிறார் .  தயவுசெய்து நீங்கள் எல்லாம் அறநிலைத்துறை அமைச்சராக இருக்கிறீர்கள் மக்களுக்கு நல்லது செய்ய பாருங்கள்” என்று பேசியுள்ளார்.