
பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு நடுத்தர வயது பெண் தற்கொலை செய்ய முடிவில் ரயிலின் முன் குதித்தார். அப்போது ஓட்டுனரின் எச்சரிக்கையால் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துவிட்டார். அதாவது ஒரு ரயில்வே நிலையத்திலிருந்து ரயில் கிளம்பிய போது திடீரென ஒரு பெண் தண்டவாளத்தில் குதித்து விட்டார்.
बेगूसराय में महिला ने चलती ट्रेन सामने लगाईं छलांग..ट्रेन ड्राइवर ने लगाया इमरजेंसी ब्रेक..उसके बाद जो हुआ वह सबको किया हैरान @news24tvchannel #biharnews #Begusarai @helpline_BP @bihar_police pic.twitter.com/bQ5HNrLaQk
— Deepti Sharma (@DeeptiShar24006) April 11, 2025
இதனை கவனித்த ரயிலின் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டார். ஆனால் அந்த பெண் ரயிலின் இஞ்சினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். உடனே ரயில்வே போலீசாரும் அந்த பகுதியில் இருந்தவர்களும் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். அவருக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. அந்தப் பெண் தற்கொலை செய்யும் நோக்கத்தில் குதித்ததால் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.