தமிழிசை சௌந்தர்ராஜன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, உதயநிதி நாங்கள் கிரிவலம் போகவில்லை. சரிவலம் தான் போகிறோம் என சொன்னார். கிரிவலமோ சரிவலமோ.. இடம் போய்க் கொண்டிருந்த நீங்கள் இப்போது வலம் போய்க் கொண்டிருக்கிறீர்கள். அதுவே ஆன்மீகத்தின் மிகப்பெரிய வெற்றி தான். என்னைப் பற்றி பேசும்போது இவர்கள் எல்லாம் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று சொன்னார். நான் என் அப்பா துணையிலோ, தாத்தா துணையிலோ வரவில்லை.

நான் தட்டு தடுமாறி தடம் மாறாமல் மக்களை பார்த்து வருகிறேன். என்னைக்காவது எங்களுக்கும் வெற்றி கிடைக்க தான் செய்யும். ஜனநாயகத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று யாருமே கிடையாது. எங்களுக்கும் ஒரு மூன்று லட்சம் பேர் ஓட்டு போட்டு அங்கீகரித்து இருக்கிறார்கள். எல்லாராலும் வெற்றி பெற முடியாது. ஆன்மீகமும் அரசியலும் தமிழ்நாட்டில் கலக்கவே கலக்காது அப்படின்னு சொல்றாரு. நான் இன்னைக்கு சவால் விடுகிறேன். ஆன்மீகமும் அரசியலும் தமிழ்நாட்டில் கலக்கத்தான் செய்யும்.

ஏனென்றால் அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்தது தமிழ். அதேபோல பெரியார் வளர்த்தது தமிழ் அல்ல. பெரியாழ்வார் வளர்த்தது தமிழ். இவங்க ரெண்டு பேரும் பேசிய சமூக நீதி அண்ணாவும் பெரியாரும் பேசல. எல்லாருக்கும் எல்லாம் என்றுதான் எங்களுக்கு கொள்கை. அதனால் தான் மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று உதயநிதி சொன்னார். எல்லாருக்கும் எல்லாம் அப்படின்னா தம்பி நீங்க நீங்க எப்படி துணை முதலமைச்சரா ஆனீங்க? எல்லாருக்கும் எல்லாம் அப்படின்னா துணை முதலமைச்சர் பதவிக்கு எல்லாரையும் நீங்க கன்சிடர் பண்ணி இருக்க வேண்டியதுதானே என கேள்வி எழுப்பி உள்ளார்.