மதிமுக சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு வைகோ பேசினார். அப்போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தது பற்றி வைகோ பகிர்ந்து கொண்டார். இது பற்றி அவர் கூறும் போது, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை முன்பு நான் சந்தித்தேன்.

அப்போது அவர் அவரிடம் இருந்த சயனைடு குப்பியை என்னிடம் கொடுத்தார். நான் அந்த சைனைடு குப்பியை இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன் என்று அவர் கூறினார். முன்னதாக திமுக கட்சிக்காக நான் 30 வருட காலம் உழைத்து 27 முறை சிறைக்கு சென்று வந்தேன்.

நான் திமுகவுக்காக உயிரை கூட கொடுக்க தயாராக இருப்பதாக பல மேடைகளில் முழங்கிய நிலையில் என்னை அந்த கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டனர் என்று கூறினார். மேலும் வைகோ சயனைடு குப்பி தன்னிடம் இருக்கிறது திமுகவினர் என்னை வெளியேற்றி வீட்டனர் என்று கூறிய கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.