பாலிவுட் நடிகை பூனம் பாண்டே (32) கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து உறவினர்கள் அறிவித்தனர். எனினும் அதன் பிறகு அவரது இறுதி சடங்கு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. அவருடைய குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் பூனம் பாண்டே தான் உயிரோடு இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி பல பெண்களுக்கு தெரியாது எனவும் அதைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த புற்றுநோயால் தான் உயிரிழந்து விட்டதாக அறிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய இறப்புச் செய்தியால் கர்ப்பப்பை வாய் தொற்றுநோய் குறித்து போதுமான விவாதம் எழுந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.