தர்மபுரி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலாம்பட்டி பகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்தில் ஏறிய சௌமியா அன்புமணி, ‘நான் உங்களுக்கான பணி செய்ய காத்திருக்கிறேன். படிச்ச பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர பாடுவேன்.

நான் உங்க அம்மா மாதிரி எதுக்கும் கவலைப்படாதீங்க. எல்லாத்தையும் அப்பா அம்மா கிட்ட சொல்லுங்க. உங்க செல்பி மத்த போட்டோ எல்லாம் சோசியல் மீடியாவுல பார்த்து போடுங்க யாரு கையிலயும் உங்க புகைப்படம் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என அறிவுரை வழங்கினார்.