கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி அன்பறிவு, சிவகுமாரின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். இந்த நிலையில்  தான் அதிக படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. 2 ஆண்டுகளுக்கு பிறகு அவரது வீரன் படம் தியேட்டருக்கு வருகிறது.

இதுகுறித்து பேசிய ஆதி, அதிக படங்களில் நடிக்காததற்கு காரணம் உள்ளது. ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரத்துக்காக நிறைய மெனக்கெடுவேன். இசையமைக்கும் வேலையும் இருக்கும். ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொன்று கற்க வேண்டி இருக்கும் என்றுள்ளார்.