உத்தரகண்ட் மாநிலம், தேஹ்ரி கர்வால் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான கேம்ப்டி வால்ஸ் பகுதியில், நீராடிக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் நடுவே திடீரென ஒரு பாம்பு தண்ணீரில் தோன்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

View this post on Instagram

 

A post shared by Little Dehradun Stories (@littledehradunstories)

முசூரி அருகேயுள்ள ராம் காஓனில் அமைந்துள்ள கேம்ப்டி வால்ஸில் சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்ந்துகொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென நீரில் ஒரு பாம்பு நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதை பார்த்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறிக் கொண்டு  ஓடினர்.

இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் தீங்கு ஏற்பட்டதாக எந்தவொரு தகவலும் இல்லை என அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. தற்போது வனத்துறை மற்றும் காவல்துறையினர் எச்சரிக்கையாக செயல்பட்டு, சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளனர்.

சுற்றுலா பகுதிகளில் இவ்வாறான அசாதாரண சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.